செய்திகள்

இஸ்ரேலியர்களின் வருகை இலங்கைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டிய இளை­ஞனை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்­ய­த­மையை படித்­த­வர்கள் யாரும் அனு­ம­திக்க மாட்­டார்கள். பொலிஸார் செய்த கேவ­ல­மான செய­லா­கவே இதை நான் பார்க்­கின்றேன். அதே­நேரம் இஸ்­ரே­லி­யர்­களின் இலங்­கைக்­கான வரு­கையை அர­சாங்கம் சாதா­ர­ண­மாக நினைக்கக் கூடாது. அது எதிர்­கா­லத்தில் நாட்­டுக்கு பாரிய பாதிப்­பாக அமையும் அபாயம் இருக்­கி­றது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

முஸ்லிம் பெண்கள் பின்­தங்­கிய நிலையில் இருக்­கி­றார்கள் என்ற காலா­வ­தி­யான கருத்தை மாற்­றுவோம்

இலங்­கையில் உள்ள அனைத்து பெண்­களும் சிறப்­பான முன்­னேற்­றத்தை அடை­யவும் தங்கள் ஆற்­றல்­களை முழு­மை­யாகப் பங்­க­ளிப்­ப­தற்கும் ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு எமது அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது என்று பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்தார். ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள கிங்ஸ்­பரி ஹோட்­டலில் நடை­பெற்ற IMRA மன்­றத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட "IMRA சிறப்பு விருது விழா 2025" நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் இதனைத் தெரி­வித்தார்.

அரபுக்கல்லூரி ஆசிரியர்கள், இமாம்களுக்கு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை

அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் மற்றும் இமாம்­க­ளுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. எதிர்­கா­லத்தில் இவர்­க­ளுக்கு முறை­யான பயிற்சி வழங்­கு­வ­தற்­கான பயிற்சி மத்­திய நிலையம் அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கிறோம் என புத்­த­சா­சன, சமய, மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரி­வித்தார்.

தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு

தேர்தல் சட்ட விதி­களை மீறி சுவ­ரொட்­டிகள் ஒட்­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கும் ஒரு லட்­சத்து இரு­ப­தா­யிரம் ரூபாய் (120,000) தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் சட்ட விதி­களை மீறி மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பிர­தே­சத்தில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மூவர், நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை ஏறாவூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

சொனிக் சொனிக்கிடம் சி.ஐ.டி. விசாரணை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய, சஹ்ரான் கும்­ப­லுடன் தொடர்­பு­களைப் பேணி­ய­தாக கூற­பப்டும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறி­யப்­பட்ட உப பொலிஸ் பரி­சோ­த­கரை சி.ஐ.டி.யினர் விசா­ரணை செய்­துள்­ளனர். தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்­வி­சா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.

குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக

பலஸ்தீன் காஸாவில் இடம்­பெற்­று­வரும் மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­குதல் நிறுத்­தப்­பட குனூத்துன் நாஸி­லாவில் பிரார்த்­திப்போம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இது குறித்து உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வா குழுவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்­க­ளாக தொடர்ந்து நடாத்­தப்­பட்டு வரும் கொடூ­ர­மான தாக்­கு­தலில், அக்­டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்­பாவி…
1 of 544